Sunday, July 8, 2018

படகு கவிழ்ந்ததில் நால்வரை காணவில்லை

அம்பாறை, தமண, எக்கல் ஓயாவில் படகு கவிழ்ந்ததில் நால்வர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். 

இன்று காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாள்ர அலுவலகம் தெரிவிக்கின்றது. 

பதுள்ளை, கந்தன சிறிசீவலி வித்தியாலயத்தின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர் குழு ஒன்று தமண பகுதிக்கு சுற்றலா சென்றிருந்த போது அதில் 9 பேர் படகு ஒன்றின் மூலம் எக்கல் ஓயாவில் பயணித்துள்ளனர். 

இதன்போது அவர்கள் பயணித்த படகு கவிழ்ந்தததை அடுத்து அருகில் இருந்த ஏனைய மீனவர்கள் முற்பட்ட ஐவரை காப்பாற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

பாடசாலையின் அதிபர், ஆசிரியர் ஒருவர், அந்த பாடசலையின் காவளாலி மற்றும் 13 வயதுடைய மாணவன் ஒருவனுமே இவ்வாறு நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். 

காணாமல் போனவர்களை தேடும் பணியில் பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவிக்கின்றார்.

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: