தெரண பெயார் அன்ட் லவ்லி ஸ்டார் சிட்டி டுவன்டி டுவன்டி நிகழ்ச்சியின் வெற்றியாளர்களாக தினக்ஷி பிரியஷாத் மற்றும் சனுத்ரி பிரியஷாத் தெரிவு செய்யப்பட்டனர்.
இலங்கை தொலைகாட்சி பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளின் முதல்தர நிகழ்ச்சியாக தெரண தொலைக்காட்சியில் ஔிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி நேற்று (07) இரவு மகரகம, தேசிய இளைஞர் சேவைகள் மன்ற அரங்கில் வெகு விமர்சையாக நடைபெற்றது.
6 மாத காலமாக நடைபெற்ற ஆரம்பகட்ட போட்டிகளுக்காக நடனம், நடிப்பு, பாடல் போன்ற பல்வேறு திறமைகளை வெளிகாட்டும் விதமாக 20 ஜோடிகள் பங்குபற்றி இருந்தன.
அதில் மூன்று குழுக்கள் இறுதிப்போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டதுடன் அவர்களில் ரொமேஷ் மற்றும் தீக்ஷன மூன்றாம் இடத்தையும், அஷான்தி மற்றும் ரன்தீர் இரண்டாம் இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.
நடுவர்களினால் 40% புள்ளியும் மக்கள் வாக்குகளினால் 60% புள்ளியும் கணக்கில் எடுக்கப்பட்டு வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.